Latestமலேசியா

இரண்டு வீடுகளில் சிவப்பு வண்ணச்சாயம்; ‘ஆ லோங்’ உதவியாளருக்கு RM10,000 அபராதம்

பத்து பஹாட், ஜூன் 19 – கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, இரண்டு வீடுகளில் சிவப்பு வண்ணச்சாயம் வீசிய குற்றத்தை ஒப்புக்கொண்ட ‘ஆ லோங்’ உதவியாளர் ஒருவருக்கு இன்று நீதிமன்றம் 10,000 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.

பாதிக்கப்பட்டவரின் வீட்டிலிருந்த சிசிடிவி கேமெராவில் பதிவான அடையாளத்தை கொண்டு காவல் துறையினர் கடந்த மே மாதம் அந்த ஆடவனை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட குற்றங்களுக்காக தற்போது 12 மாத சிறைத்தண்டனை அனுபவித்து வரும் குற்றம் சாட்டப்பட்ட 25 வயதான சஷ்வின் ரவீந்திரன், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதைத் தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. .

இந்நிலையில் அவ்விரு குற்றச்சாட்டுகளும், நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!