Latestமலேசியா

இஸ்ரேல் ஈரான் போர்; அமெரிக்கர்களுக்கு “உலகளாவிய எச்சரிக்கை”

வாஷிங்டன், ஜூன் 23 – மத்திய கிழக்கில் ஏற்படும் மோதல்களினால், வெளிநாடுகளில் வாழும் அமெரிக்கர்களுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளதென்று அமெரிக்க வெளியுறவுத்துறை உலகளாவிய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல்களினால், மத்திய கிழக்கு முழுவதும் வான்வெளியை அவ்வப்போது மூடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இஸ்ரேல் அல்லது மேற்குக் கரையில் வசிக்கும் அமெரிக்க குடிமக்களை இஸ்ரேலிருந்து வெளியேற்றுவதற்காக அமெரிக்கா விமான சேவையை உடனடியாக தொடங்கியுள்ளது.

ஈராக் மற்றும் லெபனானிலுள்ள தூதரகப் பணி ஊழியர்கள் அந்த நாடுகளை விட்டு வெளியேறவும் அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!