Latestமலேசியா

ஈப்போவில் பலத்த மழையுடன் புயல் காற்று; கூரை சரிந்து 4 பேர் காயம்

ஈப்போ, மே-18- பேராக், ஈப்போவில் நேற்று மாலை பலத்த மழையுடன் வீசிய புயல் காற்றில் பல வீடுகளின் கூரைகள் பறந்தன.

Jalan St. John-னில் உள்ள காலி வீட்டின் garage எனப்படும் மோட்டார் வண்டி பழுதுபார்க்குமிடத்தின் கூரையும் சரிந்து விழுந்தது.

அப்போது மழையிலிருந்து ஒதுங்குவதற்காக அங்கு நின்றிருந்த ஜவரில் நால்வர் காயமடைந்தனர்.

கூரையின் அடியில் சிக்கிக் கொண்டவர்களை பொது மக்கள் காப்பாற்றினர்.

மூன்று ஆடவர்களுக்கு சிராய்ப்பு காயம் ஏற்பட்ட வேளை, மேலுமொருவருக்கு கை எலும்பு முறிந்தது.

தகவல் கிடைத்து வந்து சேர்ந்த தீயணைப்புப் படை, சம்பவ இடத்தில் வேறு யாரும் சிக்கியிருக்கிறார்களா என்பதை உறுதிச் செய்ய முழு பரிசோதனை மேற்கொண்டது.

இவ்வேளையில், கூகுசான் மஞ்சோயிலும் 10 வீடுகள் புயலில் பாதிக்கப்பட்டன.

2 வீடுகளின் கூரைகள் பறந்த வேளை, மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையை மறைத்துக் கொண்டன.

எனினும் அச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை.

இந்த புயல் காற்றில் லெபோ ராஜாவாலியில் 8 வீடுகள் சேதமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!