
வாஷிங்டன், ஜூன்-19 – ஈரானை அமெரிக்கா தாக்கலாம், தாக்காமலும் போகலாம் என அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
“நான் என்ன செய்யப் போகிறேன் என்பது யாருக்கும் தெரியாது, தெரியப் போவதும் இல்லை” என வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
இஸ்ரேல் – ஈரான் மோதலில் அமெரிக்கா மூக்கை நுழைக்கக் கூடாது; மீறினால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அமெரிக்கா விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என, ஈரானிய உச்சத் தலைவர் அயதொல்லா அலி கொமேனி எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களில், டிரம்ப் அவ்வாறு கூறினார்.
எந்த நிபந்தனையுமின்றி ஈரான் சரணடைய வேண்டுமென முன்னதாக டிரம்ப் வற்புறுத்திய நிலையில், அந்த பேச்சுக்கே இடமில்லை என அயதொல்லா திட்டவட்டமாகக் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அயதொல்லா எங்கு ஒளிந்துள்ளார் என்பது அமெரிக்காவுக்குத் தெரியுமென்றும் அவரை கொல்ல நீண்ட நேரம் பிடிக்காது என செவ்வாய்க்கிழமை டிரம்ப் எச்சரித்திருந்தார்.
ஆனால் இப்போதைக்கு அந்த அளவுக்கு செல்ல விரும்பவில்லை என்றார் அவர்.
இவ்வேளையில் ஆறாவது நாளாக இஸ்ரேலிய நகரங்களைக் குறி வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சு கூறியது.
இரு தரப்பிலும் இதுவரை 300-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்