Latestமலேசியா

ஈரான் வான்வெளியைத் தவிர்க்க விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்து- EASA எச்சரிக்கை

பாரிஸ், ஜனவரி 17 – தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஈரான் வான்வெளியைப் பயன்படுத்த வேண்டாம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் விமானப் பாதுகாப்பு முகமையான EASA விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் சாத்தியமான இராணுவ நடவடிக்கை அச்சுறுத்தல் காரணமாக, ஈரானின் வான்வழிப் பாதுகாப்பு அமைப்புகள் உயர் எச்சரிக்கை நிலையில் உள்ளன. இதனால், விமானங்களைத் தவறாக அடையாளம் காணும் அபாயம் அதிகரித்துள்ளதாக EASA தெரிவித்தது.

ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்படலாம் என்பதாலும், இராணுவ நடவடிக்கைகள் திடீரென நடைபெறும் சாத்தியம் உள்ளதாலும், அனைத்து உயரங்களிலும் பறக்கும் பயணியர் விமானங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஈரானில் வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் நாணய மதிப்பு வீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட அரசுக்கு எதிரான போராட்டங்களில் 3,428 பேர் உயிரிழந்ததாகவும், 10,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு அல்லாத அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!