Latestமலேசியா

உகண்டாவில், காதலனால் தீ வைத்து எரிக்கப்பட்ட ஒலிம்பிக் வீராங்கனை உயிரிழப்பு

உகண்டா, செப்டம்பர் 5 – கென்யாவில் வசித்து வந்த உகாண்டா தடகள வீராங்கனை ரெபேக்கா செப்டேஜி (Rebecca Cheptegei) அவரது காதலனால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலத்த காயமடைந்த அவர், 80 விழுக்காடு தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.

2024ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் தொலைதூர ஓட்டப்பந்தயத்தில் 44வது இடத்தை பிடித்த 33 வயது வீராங்கனைதான் ரெபேக்க செப்டேஜி (Rebecca Cheptegei).

கருத்து வேறுபாடு காரணமாக அவரது காதலன், கடந்த ஞாயிற்றுக்கிழமை பெட்ரோலை ஊற்றி உயிருடன் அவரை எரித்துள்ளான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!