Latestமலேசியா

உடல்நலம் தேறியது; IJN-னிலிருந்து வெளியேறினார் புரூணை சுல்தான்

கோலாலம்பூர், ஜூன்-1 – உடல் சோர்வினால் 5 நாட்களாக IJN எனப்படும் தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சைப் பெற்று வந்த புருணை சுல்தான், சுல்தான் ஹசானால் போல்கியா நேற்று அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார்.

எனினும் புருணை திரும்பும் முன் மேலும் சில நாட்கள் கோலாலம்பூரிலேயே தங்கி ஒய்வெடுக்குமாறு IJN அவரை அறிவுறுத்தியுள்ளது.

புருணை பிரதமர் துறை அலுவலகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதனை உறுதிப்படுத்தியது.

புருணையின் பிரதமர், நிதியமைச்சர், தற்காப்பு அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகிக்கும் சுல்தான் ஹசானால் போல்கியா, 46-ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த வாரம் மலேசியா வந்திருந்தார்.

எனினும் அதிகப்படியான களைப்பால் கடந்த செவ்வாய்க்கிழமை அவர் IJN-னில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை சென்று நலம் விசாரித்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், 79 வயது சுல்தான் ஹசானால் நல்ல நிலையில் இருப்பதாகக் கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!