Latestமலேசியா

உணவுகளின் தூய்மை, பாதுகாப்பு விதிமுறையை பின்பற்றத் தவறிய உணவகத்தை மூடும்படி உத்தரவு

உலுசிலாங்கூர், மே 21 – உலு சிலாங்கூர் மாவட்டத்தில் பல்வேறு சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக மீறிய ஒரு உணவகத்தை உடனடியாக மூடும்படி உலுசிலாங்கூர் நகரான்மைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து, திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்திகரிப்புத் துறையின் (JPSPPA) ஆய்வுப் பிரிவு, அமலாக்கத் துறை மற்றும் உரிமம் வழங்கும் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையைத் தொடர்ந்து 14 நாட்களுக்கு சம்பந்தப்பட்ட உணவகத்தை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டதாக உலு சிலாங்கூர் நகரான்மைக் கழகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அந்த உணவகத்தின் சமையல் பொருட்கள் வைக்கும் அலமாரிகளில் எலி எச்சம், கரப்பான் பூச்சி எச்சம் ஆகியவை இருந்ததோடு , நீண்ட நகங்களைக் கொண்ட உணவு கையாளுபவர்கள், சமையலின்போது அணிந்துகொள்ளும் மேலாடை (Apron) மற்றும் தலைக்கவசம் அணியாதவர்கள், கழுவப்படாத கோழி முட்டைகள், வளாகத்திலிருந்து வெளியேறும் கழிவுகள் பொது வடிகால்களில் சேருதல், உணவு கழிவுகளை பொது வடிகால்களில் கொட்டுதல் ஆகியவை இந்த உணவகத்தில் கண்டறியப்பட்ட குற்றங்களில் அடங்கும்.
கூடுதலாக, எண்ணெய் தொட்டி முறையாக பராமரிக்கப்படவில்லை, சமையல் உபகரணங்கள் மற்றும் துப்புரவுத் துணிகளும் அசுத்தமான நிலையில் இருந்தன. திடக்கழிவு மேலாண்மை ஒழுங்காக அமைக்கப்படவில்லை மற்றும் பல குற்றங்கள் கண்டறியப்பட்டதாக. 2007ஆம் ஆண்டின் உணவு நிறுவனங்கள் துணைச் சட்டங்கள் மற்றும் உணவுகள் கையாள்வோரின் விதிமுறையின் கீழ் மூன்று சம்மன்களும் அந்த உணவகத்திற்கு வழங்கப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!