Latestஉலகம்

உத்தர பிரதேசத்தில் முன்னாள் காதலிக்கு வலுக்கட்டாயமாக முத்தம்; நாக்கை கடித்து துப்பிய பெண்

கான்பூர், நவம்பர்-20 – இந்தியா, உத்தர பிரதேசத்தில் தனது முன்னாள் காதலிக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயன்ற ஆடவரின் நாக்கை, அப்பெண் கடித்து துப்பியச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாக்குத் துண்டாகி அந்நபர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை மாலை ஏரிக்கு தனியாகச் சென்ற அப்பெண்ணைப் பின்தொடர்ந்த Champi எனும் 35 வயது அவ்வாடவர், கையைப் பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக முத்தமிட முயன்றார்.

மல்லுக்கட்டியப் அப்பெண் கடைசியில் அவ்வாடவரின் நாக்கை பலங்கொண்டு கடித்துத் துப்பினார்.

நாக்கிலிருந்து இரத்தம் கொட்டி அவ்வாடவர் அலறவே, கிராம மக்கள் ஓடி வந்து, மருத்துவமனையில் சேர்த்தனர்.

உடனடியாக விசாரணையில் இறங்கிய போலீஸ், அந்நபர் திருமணமாகி 2 குழந்தைகளுக்குத் தந்தையானவர் என்பதை கண்டறிந்தது.

இருந்தும் முன்னாள் காதலியுடன் Champi தொடர்பில் இருந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டில் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையுடன் திருமணத்திற்கு தயாராகி வந்த முன்னாள் காதலி, தன்னை தவிர்த்து வந்தது Champi-க்கு பெரும் ‘மனஉளைச்சலை’ ஏற்படுத்தியதாகவும், அப்போது தான் இந்த நாக்குக் கடிக்கு அவர் ஆளாகியதாகவும் கூறப்படுகிறது.

போலீஸார் Champi-க்கு எதிராக வழக்கு பதிவுப் செய்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!