
கோலாலம்பூர், ஏப்ரல்-24 – உயர் கல்வி விஷயத்தில் பிரச்னையை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு உதவிக் கரம் நீட்ட ம.இ.கா கல்விக் குழு தயாராக உள்ளது.
அப்பிரிவின் தலைவரும் ம.இ.கா தேசிய உதவித் தலைவருமான டத்தோ Dr ஆர். நெல்சன் அவ்வாறு உறுதியளித்துள்ளார்.
இதற்காக, பிரத்தியேகமாக கூகள் பாரம் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள், QR குறியீட்டை scan செய்து அதில், தங்கள் விவரங்களைப் பதிவிட்டு, கல்வி சம்பந்தப்பட்ட எந்த பிரச்னையாக இருந்தாலும் குறிப்பிடலாம்.
அவர்களை, ம.இ.கா கல்விக் குழுவைச் சேர்ந்த ஆலோசகர்கள் தொடர்புகொண்டு உரிய ஆலோசனைகளை வழங்குவர் என, இன்றைய செய்தியாளர் சந்திப்பில் Dr நெல்சன் கூறினார்.
2024 SPM தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியிருப்பதால், பல்கலைக் கழக நுழைவுக்கான UPU விண்ணப்ப முறை, மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் குறித்தும் அவர் பேசினார்.
மேற்கல்வி திட்டம், அடுத்து என்ன செய்வது, கல்வி உபகாரச் சம்பள வாய்ப்புகள், பொது ஆலோசனைகள் போன்றவற்றையும் ம.இ.கா கல்விக் குழு வழங்கும்.
குறிப்பாக, Pre-U, Matriculation, டிப்ளோமா, TVET தொழில்கல்வி நுழைவுத் தொடர்பிலும் மாணவர்களுக்கு உதவத் தயார் என அவர் சொன்னார்.
ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த QR குறியீட்டை கிளிக் செய்யவும்.
அல்லது mic.edu.2025@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் நேரடியாகத் தொடர்புகொள்ளலாம்.