
புத்ராஜெயா, ஏப்ரல்-27- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, தனது முதல் மெய்நிகர் அதிகாரியின் அவதாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
AI அதி நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த பெண் அதிகாரி கதாபாத்திரத்திற்கு, ‘Saya Antirasuah’ என்பதன் சுருக்கமான SARA என பெயரிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப சமூக ஊடகங்களில் ஊழல் தடுப்புப் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்காக, MACC இம்முயற்சியில் இறங்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற MACC ஊடக விருதளிப்பு விழாவின் போது வீடியோ வயிலாக ‘SARA’ அறிமுகப்படுத்தப்பட்டார்.
இதற்கு முன் EPF எனப்படும் ஊழியர் சேமநிதி வாரியமும் ‘Elya’ என்ற பெயரில் இதே போன்றதொரு மெய்நிகர் பெண் கதாபாத்திரத்தை உருவாக்கியிருந்தது.
‘Elya-வை கேளுங்கள்’ என்ற அங்கத்தில் EPF குறித்த மக்களின் கேள்விகளுக்கு அந்த மெய்நிகர் அதிகாரி பதிலளித்து வருகிறது.