
கோலாலம்பூர், மே-14 – கடன் வாங்க வேண்டியக் கட்டாயத்தில் வட்டி முதலையிடம் தனது நிர்வாணப் புகைப்படத்தை அனுப்பிய பெண், அதையெண்ணி இப்போது வருந்துகிறார்.
‘K’ என மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட 27 வயது அப்பெண், 3,000 ரிங்கிட்டிலான தனது கார் கடனைச் செலுத்துவதற்கு வேறு வழியில்லாமல் சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்யும் வட்டி முதலையைத் தொடர்புகொண்டுள்ளார்.
தொடக்கத்தில், வட்டிக்கு பணம் வேண்டுமென்றால் 1,000 ரிங்கிட் முன்பணத்தைக் கட்ட வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.
அதைச் செலுத்தியப் பிறகும் பணம் கைக்கு வரவில்லை.
அதற்கு பதிலாக நிர்வாணப் புகைப்படங்களை அனுப்புமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.
அவசரப் பணத் தேவையால், எதையும் யோசிக்காமல் அவரும் நிர்வாணப் படத்தை அனுப்பி விட்டார்.
இப்போது, மேலும் பணம் தர வேண்டுமென்றும், தவறினால் நிர்வாணப் படத்தை குடும்பத்தாருக்கு அனுப்பப் போவதாகவும் வட்டி கும்பல் மிரட்டுகிறது.
இதையடுத்து போலீஸில் புகார் செய்துள்ளதாக, விஸ்மா MCA-வில் ம.சீ.ச ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் ‘K’ சொன்னார்.