
கோலாலம்பூர், ஜூன்-14 – நாட்டின் பிரபல சினிமா இயக்குநரான முரளி அப்துல்லா கடுமையான மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அண்மையை ஹஜ் பெருநாளுக்கு முதல் நாளில் தமக்கு அந்த மாரடைப்பு ஏற்பட்டதாக, 62 வயது முரளி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறினார்.
அதுவொரு கடுமையானத் தாக்குதல் என்றும் தற்போது தனது இருதயம் வெறும் 33 விழுக்காடு பலத்தில் மட்டுமே இயங்குவதாகவும் முரளி சொன்னார்.
மலாய் நாடக – திரைப்படத் துறையில் தடம் பதித்தவரான முரளி தற்போது கோலாலம்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருதய அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொலைக்காட்சி இரசிகர்களிடையே முத்திரைப் பதித்த Aishah 50 Sen நாடகத்தின் இயக்குநருமான முரளி அப்துல்லா, இந்தச் சோதனையிலிருந்து விரைவிலேயே மீண்டு குணமடைய வேண்டுமென கலையுலக நண்பர்களும் இரசிகர்களும் சமூக ஊடகங்களில் எதிர்பார்ப்பை வெளியிட்டனர்