Latestமலேசியா

கன்னட மொழி சர்ச்சையில், மன்னிப்பு கேட்க இயலாது; கர்நாடாகாவில் படத்தின் திரையீட்டையே தள்ளிவைத்த கமல்ஹாசன்

அண்மையில், ‘தக் லைஃப்’ (Thug Life) பட வெளியீட்டு விழாவில், கன்னட மொழி தமிழிலிருந்துதான் பிறந்தது என்று கூறியதையொட்டி தான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க இயலாது என்று கன்னட உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மீண்டும் மீண்டும் நீதிபதி வலியுறுத்திய போதும், கலமஹாசன் அதற்கு இணக்கம் தெரிவிக்கவே இல்லை. மாறாக கர்நாடாகாவில் அப்படத்தின் திரையீட்டையே தள்ளி வைத்துவிட்டார்

கன்னட நடிகர் சிவராஜ்குமாரைக் குறிப்பிட்டு கமல்ஹாசன் பேசியதைத் தவறாக புரிந்துக் கொண்ட கன்னட அமைப்பினர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுமில்லாமல், ‘தக் லைஃப்’ படத்தை கர்நாடகாவில் வெளியிடவும் தடை விதிக்க கோறியிருந்தனர்.

அதனை எதிர்த்து கன்னட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த கமல்ஹாசன், தவறாக பேசினால் மன்னிப்பு கேட்கலாம், ஆனால் தவறாக பேசாத போது எவ்வாறு மன்னிப்பு கேட்க இயலும் என்று கூறியுள்ளார்.

கன்னட உயர் நீதிமன்றத்திற்கு அவர் எழுதிய மனுவில் தாம் கன்னட மொழியை பெரிதும் மதிப்பதாகவும், அம்மொழிக்கு இழுக்கு ஏற்படுத்தும் அளவிற்கு எதையும் பேசவில்லை என்பதனையும் குறிப்பிட்டிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!