
ஈப்போ, மே 23 – வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் மோசடி திட்டங்களை நம்பி உயர்க் கல்வி நிலையங்களில் புதிதாக கல்வியை முடிக்கும் இளைஞர்களில் பெரும்பாலோர் ஏமாந்து வருவதாக தீபகற்ப மலேசிய மனித ஆற்றல்துறையின் தலைமை இயக்குநர் கமால் பார்டி ( Kamal Pardi ) தெரிவித்தார். கூடுதலான சம்பள வாய்ப்பு மற்றும் பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் என கூறப்படும் வாக்குறுதிகளை வழங்கும் மோடி கும்பல்களை இளைஞர்கள் அதிகமாக நம்புவதே இதற்கான காரணம் என அவர் கூறினார். உயர்க்கல்வியை முடித்த இளைய தலைமுறையினர் வேலை செய்ய ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கு எந்த அனுபவமும் இல்லை, சலுகை செல்லுபடியாகுமா இல்லையா என்பதை அவர்கள் சரிபார்ப்பதில்லை, பெரும்பாலான சலுகைகள் வெளிநாடுகளில் வேலை செய்வோருக்கு வழங்கப்படுவதாக வாக்குறுதி வழங்கப்படுகின்றன.
எனவே, இளைஞர்கள் கட்டாய உழைப்புக்கு பலியாக இதுவே காரணமாகிறது தொழிலாளர் சுரண்டலைத் தடுப்பது: கட்டாய உழைப்பை பூஜ்ஜியமாக்குதல் 2030 என்ற நிகழ்ச்சியைத் தொடக்பி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் Kamal Pardi கூறினார். இதற்கிடையில், தொழிலாளர் சுரண்டல் மற்றும் கட்டாய உழைப்பு பிரச்னைக்கு எதிரான கூட்டு நடவடிக்கையை வலுப்படுத்துவதற்கும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஒருங்கிணைந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.