Latestஉலகம்

இத்தாலியில் கேபிள் கார் விபத்தில் நான்கு சுற்றுப்பயணிகள் பலி

நேப்பல்ஸ் , ஏப் 18 – இத்தாலியின் தென் பகுதியிலுள்ள கரையோர நகரான Naples சிற்கு அருகே கேபல் கார் விழுந்ததில் நால்வர் மரணம் அடைந்ததோடு மேலும் ஒருவர் காயம் அடைந்தார். di Stabia விலுள்ள Castellammare நகரிலிருந்து Naples சிலுள்ள Moutn Faito வுக்கு சுற்றுப்பயணிகளை ஏற்றிச் சென்ற கேபல் காரின் இணைப்பு அல்லது கேபல் அறுந்ததால் இச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

இறந்த நிலையில் நால்வரின் உடல்கள் மீட்கப்பட்ட வேளையில் காயத்திற்கு உள்ளான 5ஆவது நபரின் உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக தீயணைப்புத் துறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மீட்பு நடடிவக்கையில் 50 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

6 பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு கேபல் கார் Castellammare வுக்கு அருகில் இருந்ததோடு அதில் இருந்தவர்கள் அனைவரும் தரையிறங்கினர். இரண்டாவது கேபல் கார் Mount Faito மலையில் ஒரு பள்ளத்தாக்கின் மேல் இருந்ததோடு மூடு பனியால் மீட்பு முயற்சி தாமதமானதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.

கோடை காலத்திற்காக கேபல் கார் மீண்டும் திறக்கப்பட்ட பின் எற்பட்ட இச்சம்பவம் குறித்து உடனயாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தேவையான அனைத்து பாதுகாப்பு நிலைமைகளும் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் கேபல் கார் சேவை மீண்டும் திறக்கப்பட்டதாக அந்நிறுவனத்தின் தலைவரான Umberto de gregorio தெரிவித்தார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!