
சென்னை, ஜூன்-4 – மலேசியாவிலிருந்து 2 உடும்புகளை பயணப் பெட்டியில் மறைத்து வைத்து கடத்திச் சென்ற ஆடவர், தமிழகத்தில் பிடிபட்டார்.
Batik Air flight OD223 விமானத்தில் அந்நபர் திங்கட்கிழமை வந்திறங்கியதாக, திருச்சிராப்பள்ளி அனைத்துலக விமான நிலைய சுங்க அதிகாரிகள் கூறினர்.
ஏற்கனவே தகவல் கிடைத்திருந்ததால், வந்திறங்கிய அந்நபர் உடனடியாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
அவரின் பயணப் பெட்டியினுள் பல்வேறு உணவுப் பண்டங்களுக்கு மத்தியில் அவ்விரு உடும்புகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
அவற்றின் வாய்கள் மற்றும் கைகால்கள் ஒன்றாக டேப் மூலம் ஒட்டப்பட்டு, கருப்பு துணியால் சுற்றப்பட்டிருந்தன.
தடுத்து வைக்கப்பட்ட அவ்வாடவரிடம் விசாரணைகள் தொடருகின்றன.