கோலாலம்பூர், ஏப் 23 – கிள்ளான் பள்ளத்தாக்கில் நேற்று மாலை பெய்த கடுமையான மழையைத் தொடர்ந்து பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது, கோலாலம்பூரில் பல பகுதிகளிலும், பெட்டாலிங் ஜெயா, சுபாங் மற்றும் கோம்பாக்கிலும் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக கோலாலம்பூர் தகவல் துறை முகநூலில் பதிவிட்டது. Jalan Damansara விலிருந்து Jalan Istana வை நோக்கிச் செல்லும் சாலையின் இடது புறத்தில் வெள்ளம் ஏற்பட்டதால் பல இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
கடந்த வாரம் பெய்த கடுமையான மழையினால் Sungai Puloh மற்றும் Subang Jaya வில் வெள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து இரண்டு இடங்களில் வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன. Melaka மற்றும் Negeri Sembila னிலும் பல இடங்களில் வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன.