
பேராக், ஜூன் 11 – கடந்த திங்களன்று, UPSI பலக்லைக்கழக மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளாகி 13 மாணவர்கள் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து, அப்பேருந்து ஓட்டுநர் விசாரணை முடியும் வரை சமூக ஊடகங்களில் மற்றும் பொதுவெளிகளில் கருத்து பகிர்வதை தவிர்க்க வேண்டுமென்று பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் எச்சரித்துள்ளார்.
இந்த வழக்கு பல கோணங்களில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், விபத்தையொட்டி வலைதளவாசிகள் பதிவேற்றி வரும் கருத்துக்களுக்கு ஓட்டுநர் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளை, சமூக ஊடக பயனர்கள், விசாரணை முடிவினை ஊகித்து கருத்துக்கள் பகிர்வதை தவிர்க்க வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகள் அவர்கள் வேலையை முழுமையாக செய்ய அனுமதிக்க வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், பேருந்து ஓட்டுநர் தற்போது கையில் ஏற்பட்ட காயங்களுக்கு தைப்பிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் வரை காவல்துறையினர் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க மாட்டார்கள் என்றும் நூர் ஹிசாம் விளக்கமளித்துள்ளார்.