Latestமலேசியா

கெப்போங் பாருவில் சீனக் கோயிலாக மாற்றப்பட்ட வீடு தீக்கிரையானது

கோலாலம்பூர், ஏப்ரல்-29, கோலாலம்பூர், கெப்போங் பாருவில் சீனக் கோயிலாக மாற்றப்பட்டிருந்த 2 மாடி டேரஸ் வீடொன்று நேற்று 100 விழுக்காடு தீக்கிரையானது.

மாலை 5 மணியளவில் ஏற்பட்ட தீ, அருகிலிருந்த வீட்டுக்கும் பரவியது.

தகவல் கிடைத்து வந்து சேர்ந்த தீயணைப்பு – மீட்புப் படையினர் ஒருவழியாகத் தீயை முழுவதுமாக அணைத்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீயில், பக்கத்து வீடு 30 விழுக்காடு சேதமடைந்தது.

என்றாலும் அச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை.

தீ ஏற்பட்டதற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாக, மஞ்சலாரா தீயணைப்புத் துறை கூறியது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!