Latestமலேசியா

கோம்பாக்கில் IIUM பல்கலைக் கழக வளாகம் அருகே புலியின் கால்பாத அச்சுக்கள; வைரல் வீடியோ

கோலாலம்பூர், அக் 24 –

கோம்பாக்கில் உள்ள IIUM எனப்படும் அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழக மலேசியா வளாகத்திற்குப் பின்னால் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில், புலியின் பாதத்தின் அச்சுக்களை ஒருவர் பார்ப்பதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

@yusofyaacob847 என்ற டிக்டாக் பயனரால் பதிவேற்றப்பட்ட வீடியோவில் அந்த நபர் ஒதுக்குப்புறமான காட்டுப் பாதையில் நடந்து செல்லும் போது, ​​சேற்று நிலத்தில் திடீரென பல பெரிய பாதத்தின் அச்சுகளை காண்கிறார்.

அவர் மண்டியிட்டு அவற்றைப் பரிசோதிக்கும்போது, ​​அந்த அச்சுகள் மிகவும் புதிதாக உள்ளன என்று கூறுவது கேட்கிறது, மேலும் விலங்கு விட்டுச் சென்ற அடையாளங்களுடன் தனது கையை ஒப்பிட்டு அவர் பார்க்கிறார்.

சில நிமிடங்கள் கழித்து, அவர் பதட்டமாக சுற்றிப் பார்க்கிறார், பின்னர் ஒரு சிறிய பிரார்த்தனை வசனத்தை வாசித்துக்கொண்டே ஓடும்போது கை நடுக்கத்தினால் அவரது தொலைபேசி தரையில் விழும்போது வீடியோ திடீரென முடிகிறது.

அருகிலுள்ள புதர்களில் அசையும் சத்தத்தைக் கேட்ட பிறகு தான் ஓடிவிட்டதாகவும், அது என்ன என்பதைக் கண்டுபிடிக்க தாம் காத்திருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளையும் 200 க்கும் மேற்பட்ட கருத்துகளையும் ஈர்த்துள்ளது, நெட்டிசன்கள் அதிர்ச்சி, நகைச்சுவை மற்றும் அவநம்பிக்கை ஆகியவற்றின் கலவையுடன் எதிர்வினையாற்றுகின்றனர்.

கடந்த வாரம் உகே பெர்டானாவில் காணப்பட்டதாகக் கூறப்படும் புலியின் அச்சுகள் இருக்கலாம் என்று நெட்டிசன்களில் ஒருவர் கருத்துரைத்தார். IIUM மற்றும் யு.கே பெர்டானா வெகு தொலைவில் இல்லை என்று மற்றொருவர் குறிப்பிட்டார்.

பாத அச்சுகள் உண்மையில் புலியிடமிருந்து வந்ததா என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், கோம்பாக் மற்றும் அருகிலுள்ள Hulu Kelangகை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் வனவிலங்குகள் காணப்பட்டதாக இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!