
கோலாலம்பூர், செப் 11 – Genting Sempahவிலிருந்து கோம்பாக் செல்லும் சாலையின் 31.2 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த சாலை விபத்தைத் தொடர்ந்து கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையில் வழக்கத்திற்கு மாறாக ஒரு மணி ரேத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் எற்பட்டது .
இன்று காலை மணி 7.24க்கு நிகழ்ந்த அந்த விபத்தில் சாலையின் மையப் பகுதி மற்றும் வலது புறப் பகுதியில் வாகனங்கள் முழுமையாக செல்ல முடியாத சிக்கல் ஏற்பட்டதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியம் தொடக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
விபத்து நிகழ்ந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குரத்தில் தாம் சிக்கிக் கொண்டதோடு மோட்டார் சைக்கிளோட்டிகள் மட்டுமே அந்த சாலையில் கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டதாக Tik Tok பயணர் ஒருவர் நேரலையில் தெரிவித்தார்.
விபத்து நடந்த இடத்தில் வாகனங்களின் வரிசை அசையாமல் காணப்பட்டது, மேலும் சில பயனர்கள் விபத்து நடந்த இடத்தில் வெளியேற்றும் செயல்முறைக்காகக் காத்திருந்தபோது தங்கள் கார்களில் இருந்து இறங்கியதையும் காண முடிந்தது.