
கோலாலம்பூர், மார்ச்-12 – மடானி அரசாங்கத்தின் ஒற்றுமை முகவர்களாக பங்காற்றுமாறு, ஏரா எஃ.எப் வானொலியின் 3 அறிவிப்பாளர்களுக்குப் பிரதமர் அறிவுரை வழங்கியுள்ளார்.
அதே சமயம் சர்ச்சைக்குரிய ‘வேல் வேல்’ வீடியோ தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க உதவுமாறும், அவர்களை டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
நாட்டின் கௌரவத்தையும், பெயரையும் உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்றார் அவர்.
கோலாலம்பூர் அங்காசாபூரியில் நேற்றிரவு நடைபெற்ற ஊடகங்களுக்கான மடானி நோன்புத் துறப்பு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட போது, பிரதமர் அவ்வாறு கூறினார்.
‘வேல் வேல்’ வீடியோ சர்ச்சையில் சிக்கிய அம்மூன்று அறிவிப்பாளர்களுடன் ஆஸ்ட்ரோ ஆடியோ இயக்குநர் பிரியாவும் பிரதமரைச் சந்தித்தார்.
இந்த நோன்புத் திறப்பு நிகழ்வில், மூத்த மற்றும் நலிவடைந்த ஊடகவியலாளர்களுக்கும் பிரதமர் அன்பளிப்புகளை வழங்கினார்.
பழைய நண்பர்கள், பத்திரிகையாளர்கள், அச்சு மற்றும் இணைய ஊடகங்கள், தொலைக்காட்சி, வானொலி நிறுவனங்களின் உயர் நிர்வாகத்தினருடன் பழக நேரம் கிடைத்து குறித்தும் டத்தோ ஸ்ரீ அன்வார் மகிழ்ச்சித் தெரிவித்தார்.