
போர்ட்டிக்சன், அக் 21 – போர்ட்டிக்சன் ஷெல் கேட், கம்போங் அராப்பிலிருந்து கம்போங் கெலாமிற்கு செல்லும் வழியில் உள்ள சாலை எச்சரிக்கை விளக்கை சேதப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஆடவன் ஒருவனை போலீசார் கைது செய்தனர். இதற்கு முன்னதாக நேற்று பிற்பகல் மணி 2.15 அளவில் அந்த ஆடவன் மேற்கோண்ட செயல் பொதுமக்களிடையே சினத்தை ஏற்படுத்தியதோடு இது தொடர்பாக 23 வினாடிகளைக் கொண்ட காணொளியை போட்டிக்சன் போலீசார் பதிவிட்டிருந்ததோடு அச்சம்பவம் குறித்தும் விளக்கம் தெரிவித்திருந்தனர். நேற்று மாலை மணி 3.35 அளவில் சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளியைத் தொடர்ந்து போலீசார் விழிப்படைந்ததாக போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendent Maslan Udin தெரிவித்தார்.
விசாரணையைத் தொடர்ந்து காணொளியில் காணப்பட்ட அந்த இளைஞளை போட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றவியல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்தனர் என இன்று வெளியிட்ட அறிக்கையில் மஸ்லான் தெரிவித்தார். 39 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழி வேலையில்லாதவன் என்பதோடு இதற்கு முன் அவன் இரண்டு குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டதற்கான பின்னனியையும் கொண்டிருந்ததாக அவர் கூறினார். அந்த நபர் பயன்படுத்திய ஆயுதங்களும் அவனது வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.