Latestமலேசியா

சுங்கைப் பட்டாணியில் ஆடவன் கத்தியால் தாக்கப்பட்ட விவகாரம்; விசாரணைக்கு உதவ சந்தேக நபரின் தந்தை கைது

சுங்கைப் பட்டாணி, செப் 22 – சுங்கைப் பட்டாணியில்  Paya Nahu  அடுக்கு மாடி குடியிருப்பில்   ஆடவர் ஒருவரை  கத்தியால்  வெட்டியதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேகப் பேர்வழியின்  தந்தையை  போலீசார் தடுத்துவைத்துள்ளனர்.  

நேற்று சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்ட பின்னர் அவனது   தந்தையான  50 வயது   நபர்  தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக   கோலா மூடா  மாவட்ட போலீஸ் தலைவர்    துணை கமிஷனர் 

Hanyan  Ramlan  தெரிவித்தார்.  

இந்த சம்பவத்திற்கு   போதைப் பொருள் அல்லது  குண்டர் கும்பல்  தகராறு  காரணம் அல்ல என கூறப்பட்டது. 

அந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகளும்  விசாரணைக்கு உதவும் பொருட்டு   தண்டனைச்  சடடத்தின்  326ஆவது விதியின் கீழ்  இன்று முதல்  ஐந்து நாட்களுக்கு  தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  

நேற்று மாலை மணி  3 அளவில் தனது  சகோதரருக்காக  அந்த நபர் காத்திருந்தபோது  20 வயதுடைய சந்தேகப் பேர்வழி தாக்கியுள்ளான்.  இதனால் காயம் அடந்த அந்த  நபர் தற்போது  தற்போது   சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!