
கோலாலம்பூர், ஜூன் 5 – இவ்வாண்டு நவம்பர் 30 ஆம்தேதிவரை
Besraya எனப்படும் சுங்கை பீசி விரைவு நெடுஞ்சாலையில் திட்டமிடப்பட்ட சாலை பராமரிப்பு வேலைகளை Besraya ( M) Sdn
Bhd மேற்கொள்ளவிருக்கிறது. நெடுஞ்சாலையின் இரு திசைகளிலும் பாதையை மூடும் நடவடிக்கை கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும். நெடுஞ்சாலையில் இடையிலான பல்வேறு பகுதிகளை இது உள்ளடக்கியிருப்பதாக Besraya நெடுஞ்சாலை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. சாலை மறுசீரமைப்பு மற்றும் கோடு அடையாளமிடுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள், பராமரிப்பு காலம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மேற்கொள்ளப்படும்.
பாதிக்கப்பட்ட இடங்களில் போக்குவரத்து புதுப்பிப்பு மற்றும் பாதை மூடல் தகவல்கள் நெடுஞ்சாலையில் உள்ள மின்னணு அடையாள பலகைகள் மூலம் பொதுமக்களுக்கு தொடர்ந்து தெரிவிக்கப்படும். நெடுஞ்சாலை பயனர்கள் அறிகுறிகளில் காட்டப்பட்டுள்ள அனைத்து ஆலோசனைகளையும் பின்பற்றுமாறு வலியுறுத்தப்படுகின்றனர். பயனர் வசதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் ஆதரவுடன் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக Besraya நிறுவனம் தெரிவித்துள்ளது.