
புத்ராஜெயா, ஜூன் 5 – மின் சிகரெட் அல்லது செயற்கை மருந்துகள் கொண்ட வேப் திரவங்களின் ஆன்லைன் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், அதனை கண்காணிக்க தகவல் தொடர்பு ஆணையம் (MCMC) உத்தரவு பிறப்பித்துள்ளது என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபட்சில் கூறியுள்ளார்.
இந்த அமலாக்கம் சுகாதார அமைச்சகத்தின் (MOH) அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றும், தடைசெய்யப்பட்ட பொருட்களின் ஆன்லைன் விற்பனையின் முடிவுகள் குறித்து MCMC விளக்க அறிக்கையைத் தயாரிக்கும் என்றும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மலேசிய காவல்துறையினர், மேற்கொண்ட பரிசோதனையில் வேப் பயன்பாட்டிற்கான செயற்கை மருந்துகள் விற்பனையைக் கண்டறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோகூர், தெரெங்கானு, கிளந்தான், பெர்லிஸ் மற்றும் கெடா உள்ளிட்ட பல மாநிலங்கள் வேப் விற்பனையைத் தடை செய்ய தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரிய ஒன்று என்கின்றார் ஃபாமி .