
சேலம், ஆகஸ்ட் 26 – தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் சொந்த தந்தையையும் மாற்றாந்தாயையும் கொடூரமான முறையில் கொலை செய்து, அவர்களின் உடல்களை துண்டாக்கி இரண்டு தனித்தனி ஏரிகளில் வீசிய இரு உடன்பிறப்புகளின் செயல் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உயிரிழந்த அந்த நபரின் முதல் மனைவிக்கு பிறந்த மகனும், இரண்டாம் மனைவிக்கு பிறந்த மகளும்தான் அந்த இரட்டைக் கொலைகளைச் செய்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த அன்று, இறந்த அந்த ஆடவன் தனது சொந்த மகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றதைக் கண்ட மகன் ஆத்திரம் பொறுக்காமல் இறைச்சி வெட்டும் கத்தியால் தந்தையை தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் இந்தத் தகராற்றை தடுக்க வந்த மாற்றாந்தாயையும் கடுமையாக தாக்கி, பின்னர், இருவரின் தலை மற்றும் உடல் பாகங்களைத் துண்டு துண்டாக வெட்டி சேலத்திற்கு அருகிலுள்ள இரண்டு தனித்தனி ஏரிகளில் வீசியுள்ளனர்.
இந்நிலையில் காவல்துறையினர் அம்மகனை கைது செய்து, வீசப்பட்ட உடல் பாகங்களை மீட்டெடுத்து சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.