Latestமலேசியா

தும்பாட்டில் பொற்கொல்லர் கடத்தல்; சந்தேக நபர்களுக்குப் போலீஸ் வலை வீச்சு

தும்பாட், மே-26 – கிளந்தான், தும்பாட்டில் மே 20-ஆம் தேதி ஒரு பொற்கொல்லர் கடத்தப்பட்ட சம்பவத்தில், நால்வருக்கு போலீஸ் வலை வீசியுள்ளது.

அவர்கள் இன்னமும் கிளந்தானிலேயே ஒளிந்திருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.

இதையடுத்து மாபெரும் தேடுதல் வேட்டைத் தொடங்கியிருப்பதாக, மாநில போலீஸ் தலைவர் யூசோஃப் மாமாட் கூறினார்.

நால்வரில் இருவர் அடையாளம் காணப்பட்டு விட்டனர்; சிறப்புப் பணிக் குழு அவர்களைத் தேடி வருகிறது.

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சாம்பல் நிறத்திலான Suzuki Swift காரைப் பிடிக்க, மாநிலம் முழுவதும் சாலைத் தடுப்புச் சோதனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கொள்ளை முயற்சியில் கடத்தப்பட்ட 44 வயது பொற்கொல்லர், சில மணி நேரங்களிலேயே விடுவிக்கப்பட்டார்.

அவர் கொடுத்த துப்புகளின் அடிப்படையில் போலீஸ் தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

பொற்கொல்லரின் காரை மடக்கிய 4 மர்ம நபர்கள், இன்னொரு காருக்குள் அவரை ஏற வற்புத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோ முன்னதாக வைரலானது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!