
கோலாலம்பூர், ஜூன் 14 – 2023ஆம் ஆண்டு முதல், மலேசிய காவல்துறை தலைவராக பணியாற்றி வரும் ஐஜிபி டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் (Tan Sri Razarudin bin Husain), வருகின்ற ஜூன் 22 ஆம் தேதி தனது பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து, பதவி விலகவுள்ளார்.
அவரின் பிரியாவிடை அணிவகுப்பு வரும் வாரம் வெள்ளிக்கிழமை ஜூன் 20 ஆம் தேதியன்று கோலாலம்பூர் காவல்துறை பயிற்சி மையத்தில் (PULAPOL) நடைபெறவுள்ளது.
14வது IGPயாக பதவியேற்ற அவர் டெங்கிலில் பிறந்து மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தில் (UKM) சமூக அறிவியல் மற்றும் காவல் படிப்புகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
கெடாவில் குற்றப் புலனாய்வுத் துறையில் (CID) புலனாய்வு அதிகாரியாக பணியை தொடங்கிய IGP ரசாருதீன், மலேசிய காவல்துறை துணைத்தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
புவான் ஸ்ரீ ஜைனா ஓத்மானை மணந்து, அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.