Latestமலேசியா

ஜோர்ஜ்டவுனில் 3 கடைகளில் தீயை அணைக்கும் பணியில் 2 தொண்டூழிய தீயணைப்பு வீரர்கள் காயம்

ஜோர்ஜ்டவுன், மார்ச்-17 – பினாங்கு, ஜோர்ஜ்டவுன், ஜாலான் பத்தாணியில் 3 கடைகளில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில், தொண்டூழியத் தீயணைப்பு வீரர் ஒருவர் காயமடைந்தார்.

நேற்றைய அச்சம்பவத்தில் இன்னொரு வீரருக்கு கால் எலும்பு முறிந்தது.

இருவரும் சிகிச்சைக்காக உடனடியாக பினாங்கு பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தீயில் பாதிக்கப்பட்ட 3 வளாகங்கள் முறையே கரைப்பான் எனப்படும் ஒரு thinner தொழிற்சாலை, ஒரு உலோக வேலைப்பாடு கடை மற்றும் ஒரு திருமண மேலாண்மை நிறுவனமாகும்.

தீயை அணைக்க சுமார் 1 மணி நேரம் பிடித்ததாக, பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கூறியது.

தீயில் 80 விழுக்காடு சேதம் ஏற்பட்ட நிலையில், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

அதில், 33 வயது வங்காளதேசத் தொழிலாளி நூலிழையில் உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!