
கோலாலாலம்பூர், ஜூன் 24- ம.இ.காவின் தேசிய துணைத்தலைவரும் , தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமையில் கண்ணதாசன் அறவாரியத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று கண்ணதாசன் விழா 2025 கோலாலம்பூர் , ஜாலான் ஈப்போபோ செந்தூல் செட்டியார்கள் மண்டபத்தில் பிற்பகல் 1.30 மணியளவில் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் கண்ணதாசன் அறவாரியத்தின் தலைவருமான சரவணன் உரையாற்றி நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைப்பார்.
கவிஞர் பெர்னாட்ஷா ‘வள்ளுவன் வழியில் கண்ணதாசன்’ எனும் தலைப்பில் உரையுடன்
தமிழ்நாட்டில் இருந்து சிறப்புச் சொற்பொழிவாளர்கள் தாமல் கோ.சரவணன் மற்றும் திருமதி.இந்திரா விஜயலட்சுமி ‘காலத்தால் அழியாத காவியம்’ மற்றும் ‘சமூகத்தின் பழுது போக்கிய கவியரசர்’ எனும் தலைப்புகளில் முறையே பேசுவார்கள்.
ஆண்டுதோறும் கண்ணதாசன் விழாவில், ஐந்து மலேசிய இந்தியர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்படுவர்.
மொழி ,இனம், கலை கலாச்சாரம் என்ற அடிப்படையில் பிரசித்தி பெற்றவர்களுக்கும், மக்களுக்குச் சேவையாற்றியவர்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுவரை 250க்கும் மேற்பட்ட மலேசியர்களுக்கு கண்ணதாசன் விழாவில் விருது வழங்கப்பட்டுள்ளது.
அந்த வரிசையில் இந்த ஆண்டு டத்தோ ஸ்ரீ தெய்வீகன், ஓவியர் லேனா, கமல சரஸ்வதி, விஜய வாகினி மற்றும் எல்.ராமன் ஆகியோருக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளது.
மிகவும் சிறப்பாக நடைபெறும் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி சரவணன் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.