
ஜூன் 14 – கடந்த 11 ஆண்டுகளுக்கு பிறகு, தான் ஒரு போலி முதலீட்டு திட்டத்தில் 3.9 மில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளதை அறிந்த ஓய்வு பெற்ற மருத்துவர் பெரும் அதிர்ச்சிக்குள்ளகியுள்ளார்.
சந்தேக நபர் மறைந்த தனது மனைவியின் நண்பர் என்பதால் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அவர் சிறுக சிறுக 3.9 மில்லியன் ரிங்கிட்டை முதலீடு செய்துள்ளார்.
74 வயது மதிக்கதக்க அம்மருத்துவருக்கு எந்தவித வருமானமும் கிடைக்கபெறாததைத் தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தாக பேராக் காவல் துறை தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.
தற்போது இக்குற்றம் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் மீண்டும் மீண்டும் போலி முதலீட்டில் ஏமாறுவதை தவிர்க்க வேண்டுமென்று நூர் ஹிசாம் அறிவுறுத்தியுள்ளார்