
தாப்பா, ஜூன் 29 – வடக்கு தெற்கு விரைவுச்சாலையின் அருகேயுள்ள தாப்பா ஓய்வெடுக்குமிடத்தில் (R&R), ‘சாசேஜஸ்களை’ (sausages) பிளாஸ்டிக் கொள்கலனில் அடைத்து வைத்து விற்கும் காட்சியைக் கண்டு அருவறுப்படைந்த பெண் ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவேற்றி தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
பிளாஸ்டிக் கோப்பைகளில் அடைத்து வைத்திருந்த அந்த சாசேஜஸ்கள் கெட்டு போயிருக்கக்கூடும் என்றும் அதை அப்படியே வாடிக்கையாளர்களுக்கு விற்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதென்றும் அந்த வலைதளவாசி குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நெட்டிசன்கள் தங்களுடைய அனுபவங்களையும் விரக்தியினையும் வெளிப்படுத்தி வருவதோடு இப்பிரச்சினைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமோ அல்லது நிர்வாகத்திடமோ தெரிவிக்கப்பட்டதா என்ற கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.
மேலும் பயணிகள் உணவை வாங்குவதற்கு முன் நன்கு பரிசோதிக்க வேண்டுமென்றும் எளிதில் ஏமாந்து விடக்கூடாதென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.