Latestமலேசியா

தெமெர்லோவில் கடும் புயல்; 75 வீடுகள் சேதம்

குவாந்தான், ஜூன் 10 – நேற்று மாலை 5 மணியளவில், தெமெர்லோ மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் புயலால், மொத்தம் 75 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இப்பேரிடரில், முக்கிம் பேராக் 2-இல் 74 வீடுகளும், மெந்தகாப் 2-இல் ஒரு வீடும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெமெர்லோ மாவட்ட பேரிடர் மேலாண்மைத் துறை (JPBD) செயலகம் தெரிவித்துள்ளது.

மேற்கண்ட சம்பவத்தில் எவ்வித உயிரிழப்பும் பதிவு செய்யப்படவில்லை என்றும், தற்காலிக வெளியேற்ற மையம் (PPS) திறக்கப்படவில்லை என்றும் JPBD அறிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை முதல், புயலால் சேதமடைந்த வளாகங்களைக் காட்டும் காணொளி, சமூக ஊடகங்களில் வைரலாகி வந்ததைக் காண முடிந்தது..

குடியிருப்பு பகுதிகளைத் தவிர, மரங்கள் விழுந்ததில் வாகனங்கள் சேதமடைந்ததோடு, பள்ளி கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகங்களும் சேதமடைந்து குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!