Latestமலேசியா

நாட்டில் 40 இடங்களில் நிலச்சரிவு முன்னெச்சரிக்கைக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன

கோலாலம்பூர், பிப்ரவரி-25 – கடந்த டிசம்பர் வரை, நாடு முழுவதும் 40 இடங்களில் நிலச்சரிவு முன்னெச்சரிக்கைக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இவ்வாண்டு கூச்சிங்கில் 2 இடங்கள் உட்பட சரவாக்கில் 6 இடங்களில் அக்கருவிகளைப் பொருத்த இலக்கு வைக்கப்பட்டுள்ளது; மற்றவை Bau, Kapit, Limbang, Miri ஆகியவையாகும்.

இயற்கை வளம் மற்றும் சுற்றுச் சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் மக்களவையில் அதனைத் தெரிவித்தார்.

அக்கருவிகள், இயக்க உணரிகள், மழைமானிகள், CCTV கேமராக்கள், மற்றும் அபாய ஒலியைக் கொண்டிருக்கும்.

இவ்வேளையில், சபாவின் கினாபாலு மலையில் அதிக புவி அபாய பாதிப்புக்குள்ளான பகுதிகளில் குப்பைகள் நகருவதை கண்காணிக்கும் அமைப்புகள் மற்றும் தவறு இயக்க அளவுகோல்களை பொருத்தும் பணிகள் இவ்வாண்டு இறுதிக்குள் தொடங்கும் என நிக் நஸ்மி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!