
கோலாலம்பூர், ஜூன்-19 – நெகிரி செம்பிலானில் வேலை பெர்மிட் விண்ணப்பத்தில் போலியான தகவல்களை இடம் பெறச் செய்ததன் பேரில், 3 நிறுவன இயக்குநர்கள், 2 நிறுவன மேலாளர்கள் என 5 பேர் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒரு பெண் உட்பட இருவரை ஜூன் 21 வரையிலும், இதர 3 ஆடவர்களை ஜூன் 24 வரையிலும் தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
2 வங்காளதேசிகள் மற்றும் 1 பாகிஸ்தானியரை உள்ளடக்கிய அந்த ஐவரும், நெகிரி செம்பிலான் MACC அலுவலகத்திற்கு வாக்குமூலம் அளிக்கச் சென்ற போது கைதாகினர்.
2023-ல் தொழிலாளர் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் நெகிரி செம்பிலான் குடிநுழைவுத் துறையிடம் சமர்ப்பித்த வேலை பெர்மிட் விண்ணப்பங்களில் அவர்கள் கூட்டாக அந்த மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது