Latestமலேசியா

கனரா வங்கியில் புகுந்து கொள்ளையர்கள் கைவரிசை; 59 கிலோ தங்கம் பறிபோனது

விஜயபுரா (கர்நாடகா), ஜூன்- 4 – தென்னிந்திய மாநிலம்
கர்நாடகாவில் கனரா வங்கிக் கிளையிலிருந்து, 59 கிலோ கிராம் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அவை, வங்கியிடம் வாங்கியக் கடன்களுக்காக அடகு வைத்த வாடிக்கையாளர்களுடையவையாகும்.

வாரக் கடைசி விடுமுறையில் வங்கியின் அலாரத்தை செயலிழக்க வைத்து, போலி சாவியைப் பயன்படுத்தி இந்த கொள்ளை அரங்கேறியுள்ளது.

போலீஸ் விசாரணையைத் திசை திருப்பும் முயற்சியாக, கொள்ளையர்கள் ஒரு கருப்பு ‘மந்திர’ பொம்மையை சம்பவ இடத்தில் விட்டுச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கொள்ளையர்களை கண்டுபிடிக்க 8 விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் விரைவிலேயே பிடிபடுவர் என விஜயபுரா மாவட்ட போலீஸ் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!