
கெப்பாளா பாத்தாஸ், ஏப்ரல் 21- கல்வி நிறுவனங்களில் தேசப் பக்தியை வேரூன்றும் முயற்சியில் மலேசிய கல்வி அமைச்சு, மாணவர்களின் சீருடையில் ஜாலூர் ஜெமிலாங் பேட்ஜ் அணியும் திட்டத்தை அறிமுகப்படுத்திய நிலையில், அது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
கெப்பாளா பாத்தாஸ் டத்தோ ஹாஜி அஹ்மத் படாவி இடைநிலைப்பள்ளியில் இந்த ஜாலோர் கெமிலாங் பேட்ஜ் அணியும் விழாவில் பங்கேற்று பேசியபோது, இன்று முதல், மலேசியா முழுவதும், அனைத்து பள்ளிகளிலும் 5.3 மில்லியன் மாணவர்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
அதே சமயத்தில் கல்வி அமைச்சின் கீழ் அல்லாத கல்வி நிறுவனங்களும், இந்த முயற்சியில் கல்வி அமைச்சுடன் இணைந்து செயல்படுவதற்கு ஊக்குவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே அனைத்து மாணவர்களுக்கும் இலவச தேசியக் கொடி பேட்ஜ்களை வழங்குவது, தேசபக்தியை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இன்றைய அமலாக்கம் சீராகவும் வெற்றிகரமாகவும் நடைபெறுவதற்கு ஒத்துழைத்த அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்த முயற்சி முதன்மையாக தேசபக்தி மற்றும் நாட்டின் மீது ஆழமான அன்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், மாணவர்கள் பேட்ஜ் அணியாததற்காக தண்டிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.