Latestமலேசியா

துன் டாய்ம் மனைவியுடன் தொடர்புடைய RM758 மில்லியன் லண்டன் சொத்துக்களை MACC முடக்கியது

கோலாலாம்பூர், ஜூன்-3 – மறைந்த முன்னாள் நிதியமைச்சர் Tun Daim Zainuddin மனைவி Toh Puan Na’imah Abdul Khalidடுக்குச் சொந்தமான 758.2 மில்லியன் ரிங்கிட் லண்டன் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

அச்சொத்துகளை முடக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC செய்த விண்ணப்பத்தை, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அங்கீகரித்தது.

அச்சொத்துக்கள், 2001 பணமோசடி தடுப்பு, பயங்கரவாத நிதி எதிர்ப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் பெறப்பட்ட வருமான தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களுடன் தொடர்புடையவை என, நீதிமன்றம் திருப்தி கொள்வதாக நீதிபதி Datuk Azahar Abdul Hamid தீர்ப்பில் கூறினார்.

முடக்கப்பட்ட சொத்துக்களில் 55,200,000 பவுண்ட் மதிப்புள்ள 2 வணிக கட்டடங்கள்; 77,115,000 பவுண்ட் மதிப்புள்ள 5 சொகுசு குடியிருப்புகள் மற்றும் இல்ஹாம் அறக்கட்டளைக்குச் சொந்தமான ஒரு வங்கிக் கணக்கு ஆகியவை அடங்கும்.

Tun Daim அவரின் குடும்பத்தார் மற்றும் ஒரு உறவினருக்கெதிராக, MACC அண்மையில் 8 புதிய விசாரணை அறிக்கைகளைத் திறந்த நிலையில், இத்தீர்ப்பு வந்துள்ளது.

38 நிறுவனங்கள், 19 நிலங்கள், 6 சொத்துடைமைகளில் தனக்குள்ள உரிமையை அறிவிக்கத் தவறியதாகக் கூறி கடந்தாண்டு ஜனவரியில் Daim நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

அமானா சாஹாம் நேஷனல் பங்குரிமைகள் மற்றும் 7 சொகுசுக் கார்கள் குறித்த விவரங்களையும் அவர் அறிவிக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.

அவரின் மனைவியும் அதே போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார்.

எனினும் நவம்பர் 13-ல் டாய்ம் காலமானதும், அரசு தரப்பு குற்றச்சாட்டுகளை மீட்டுக் கொள்ள, நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!