
சண்டிகர், மே-18 – பாகிஸ்தானுக்காக உளவுப் பார்த்ததன் பேரில் பெண் YouTuber உள்ளிட்ட 6 பேரை இந்தியா கைதுச் செய்துள்ளது.
ஜம்மு – காஷ்மீர் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகளைக் களையெடுப்பதில் தீவிரம் காட்டி வரும் இந்தியா, மறுபக்கம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவோரையும் ‘வேட்டையாடி’ வருகிறது.
அவ்வகையில் பாகிஸ்தானுக்கு உளவுப் பார்த்து வந்த பலர் கைதாகி வருகின்றனர்.
புதிதாக, ஹர்யாணா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் 6 பேர் கைதாகியுள்ளனர்.
‘Travel With Jo’ என்ற பெயரில் YouTube பக்கத்தை நடத்தி வரும் ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் அவர்களில் முக்கியமானவர்.
2023-ஆம் ஆண்டு கமிஷன் முகவர் மூலம் விசா பெற்று பாகிஸ்தானுக்கு சென்ற ஜோதிக்கு, அங்கு உளவுத் துறை நிறுவனங்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.
பிறகு நாடு திரும்பியர் வாட்ஸ்சப், டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக பாகிஸ்தானியர்களுட தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
இந்தியா குறித்த இரகசியங்களை அவர்களுக்கு பகிர்ந்து வந்ததுடன், சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் ஜோதி செயல்பட்டு வந்துள்ளார்.
பாகிஸ்தான் பயணத்தின் போது அந்நாட்டு அதிகாரிகளுடன் இருக்கும் வீடியோக்களை இவரே தனது சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஜோதி உள்ளிட்ட அறுவரும் பணப் பரிமாற்றங்களை செய்பவர்களாக செயல்பட்டு வந்துள்ளதும் கண்டறியப்பட்டது.
தொடர்ந்து உண்மைகளை வரவைக்க ஜோதியிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.