
மலாக்கா, மே-5, பொது சாலைகளில் மின்னியல் ஸ்கூட்டர்களை ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென, சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனிப்பட்ட பயன்பாட்டுக்கான போக்குவரத்து முறைகளில் புரட்சியாகக் கருதப்படும் மைக்ரோமொபிலிட்டி வாகனங்களை, பொது மக்கள் பயன்படுத்தும் சாலைகளில் ஓட்டுவது, 2021 டிசம்பரில் வெளியிடப்பட்ட ஆணைப்படி குற்றமாகும்.
மின்னியல் ஸ்கூட்டர்கள், அங்கீகரிக்கப்படாத மின்னியல் சைக்கிள்கள், hoverboard , monowheel, segway உள்ளிட்டவையும் அவற்றிலடங்கும்.
அவ்வுத்தரவை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அதிகபட்சம் 1,000 ரிங்கிட் அபராதமும் 3 மாத சிறையும் விதிக்கப்படலாம்.