
புக்கிட் மெர்தாஜம், ஜூன் 6 – புக்கிட் மெர்தாஜாம்மில் கட்டுமான தளத்தின் 8ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த செங்குத்து ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்தார்.
துணை குத்தகையாளரால் பணியமர்த்தப்பட்ட 41 வயதுடைய அந்த ஆய்வாளர் lift பகுதிக்கு அருகில் செங்குத்துத்தன்மை கணக்கெடுப்பை மேற்கொண்டபோது கட்டிடத்தின் திறப்பு வழியாக சுமார் 27 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்ததாக நம்பப்படுவதாக DOSH எனப்படும் பினாங்கு தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்தது.
முதல்கட்ட விசாரணையில் LIFT திறப்பு பகுதி ஒட்டு பலகையால் மட்டுமே மூடப்பட்டிருந்தது மற்றும் வேலிகளால் சூழப்பட்டிருந்ததோடு அவை எடையைத் தாங்கவோ அல்லது தொழிலாளர்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்கவோ போதுமானதாக இல்லை என்பது கண்டறியப்பட்டது.
இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பினாங்கு தொழில் பாதுகாப்பு சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த இடத்தைப் பார்வையிட்டு உடனடி விசாரணையைத் தொடங்கினர்.
சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் வரை கட்டுமானப் பணிகளை நிறுத்துவது, விபத்து நிகழ்ந்த இடத்தில் விசாரணை நடத்தி அதற்கான காரணத்தை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி பிரதான குத்தகையாளருக்கு DOSH அறிக்கையை கொடுத்துள்ளது