Latestஉலகம்

புக்கெட் விமான நிலையத்தில் Air India Express கடுமையான தரையிறக்கம்; அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்

புக்கெட், மார்ச்-12 – இந்தியாவின் ஹைதராபாத்திலிருந்து தாய்லாந்தின் புக்கெட் புறப்பட்ட, Air India Express விமானம் நேற்று கடுமையான தரையிறக்கத்திற்கு ஆளானது.

புக்கெட் விமான நிலையத்தில் அந்த போயிங் 737 MAX 8 விமானத்தின் மூக்கு சக்கரம் சேதமடைந்து, ஓடுபாதையில் சிக்கியது.

எனினும் 133 பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்; எவருக்கும் காயம் எதுவும் இல்லை.

இதனால் புக்கெட் விமான நிலையம் சுமார் 6 மணி நேரம் மூடப்பட்டு, பல விமானங்கள் தாமதம் மற்றும் மாற்றம் கண்டன.

சம்பவத்திற்கான காரணத்தை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!