
கோலாலும்பூர், மே 28 – அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டிற்குப் பிறகு, உடல்நலக்குறைவு காரணமாக தேசிய இருதய நிறுவனத்தில் சிகிச்சைப் பெற்று வந்த சுல்தான் புருணை (Sultan Brunei), சுல்தான் ஹசனல் போல்கியா (Sultan Hassanal Bolkiah) அவரின் உடல்நலம் தற்போது சீராக உள்ளதென்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது துணைவியார், டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோரும் புரூணை சுல்தானை IJN இல் சந்தித்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புரூணை அரச குடும்பத்தினரைத் தவிர வேறு எந்த பார்வையாளர்களையும் தாங்கள் அனுமதிக்க இயலாது என்று மருத்துவர் குழு கூறியுள்ளது.
மேலும், சுல்தான் ஹசனல் போல்கியாவின் உடல்நலத்திற்காக அனைத்து மலேசியர்களும் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்றும் அவர் விரைவில் குணமடைய வேண்டுமென்றும் பிரதமர் அன்வர் குறிப்பிட்டுள்ளார்.