
நியூ யோர்க், மே-17 – 1,110 அடி நீளத்தில் இராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி பயணிப்பதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா எச்சரித்துள்ளது.
‘Astroid 2003 MH4’ என்றழைக்கப்படும் இந்த விண்கல், மே 24-ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் பறந்துச் செல்லும்.
பூமியுடன் ஆக நெருக்கத்தில் 6,680,000 கிலோ மீட்டர் தொலைவில் அது இருக்கும்.
அளவில் மிகப் பெரியதென்பதால் இதனை ‘அபாயகரமான விண்கல்’ என்றும் நாசா அழைக்கிறது.
492 அடி நீளத்தை மீறும் எந்தவொரு விண்கல்லும் அபாயகரமான பொருள் என நாசா வகைப்படுத்தியுள்ளது.
ஆக இந்த எரிகல் பூமியின் மீது மோதினால் மிகப்பெரிய அழிவு ஏற்படலாம்; ஆனால் அப்படி நடப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவே.
காரணம், பூமியை விண்கல் நெருங்கும் போது அதன் அளவு குறைந்து சிறிய துகள்களாக மாறவே அதிக வாய்ப்பிருப்பதாக நாசா கூறுகிறது.
என்றாலும், இந்த விண்வெளிப் பாறையின் சாத்தியமான தாக்கம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
எனவே, பூமிக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய எந்த சிறுகோள்கள் மீது விழிப்புடன் இருக்கவும், அவற்றுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவும் நாசா திட்டமிட்டுள்ளது.