Latestமலேசியா

பெட்டாலிங் ஜெயாவில் பள்ளி தோழரைப் பாரங்கத்தி காட்டி மிரட்டிய படிவம் 3 மாணவன் கைது

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 11 – அண்மையில் படிவம் 3 பயிலும் மாணவன் ஒருவன் தனது பள்ளி தோழரைக் கொலை செய்வதைப் போல பாசாங்கு செய்வதற்கு பாராங்கத்தியைக் காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர் செய்த புகாரின் அடிப்படையில், கத்தியை காட்டி மிரட்டிய அந்த படிவம் 3 மாணவனைப் போலீசார் கைது செய்தனர்.

மேலும் இக்குற்றம் குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட்டு மேல் விசாரணையும் நடைபெற்று வருகிறது என்று கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் Noor Ariffin Mohamad Nasir கூறினார்.

புகாரின்படி, சந்தேக நபர் கடந்த திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் வீடியோ அழைப்பில், மூன்று பராங்கத்திகளைக் காட்டியபடி, பணம் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிவம் 1 முதலே தான் இவ்வாறு மிரட்டப்பட்டு வருவதாகவும் போலீசிடம் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!