Latest

பெண் பயணிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்து வந்த டாக்சி ஓட்டுநர் ஜப்பானில் கைது; மக்கள் கலக்கம்

தோக்யோ, மே-23 – தனது காரில் ஏறிய இளம் பெண்ணுக்கு தூக்க மருந்து கொடுத்து கற்பழித்ததன் பேரில் டாக்சி ஓட்டுநர் ஒருவர் ஜப்பானில் கைதாகியுள்ளார்.

அப்பெண் மயங்கியதும், அவரை தன் வீட்டுக்குக் கூட்டிச் சென்று கற்பழித்ததோடு, அதை வீடியோவாகவும் 54 வயது அந்நபர் படமெடுத்துள்ளார்.

தூக்க மாத்திரைகளின் தடயங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் தலை முடியில் கண்டெடுக்கப்பட்டன.

இதையடுத்து, பரஸ்பர இணக்கமில்லாமல் பாலியல் உறவு மேற்கொண்டது, அந்தரங்க உறுப்புகளை படமெடுத்தது ஆகியக் குற்றங்கள் தொடர்பில் அந்நபர் விசாரிக்கப்படுகிறார்.

50-க்கும் மேற்பட்ட பெண் பயணிகளிடம் அவர் இந்த அராஜகத்தைப் புரிந்திருக்கலாமென போலீஸ் சந்தேகிக்கிறது.

அதற்கு ஆதாரமாக, அவரது கைப்பேசியில் 3,000-க்கும் மேற்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் கைப்பற்றப்பட்டன.

2008-ஆம் ஆண்டிலிருந்தே அவர் ‘இவ்வேலையை’ பார்த்து வந்துள்ளார்.

இன்னொரு பெண்ணுக்கு இதே போல் மயக்க மருந்து கொடுத்து 280 டாலர் பணத்தை கொள்ளையிட்டதாக, ஏற்கனவே கடந்தாண்டு அக்டோபரில் கைதானவர் தான் இந்த ஆடவர்.

ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களை அடையாளம் காணும் பணியில் போலீஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த டாக்சி ஓட்டியின் செயலால், பொது போக்குவரத்து பாதுகாப்பு குறித்து, ஜப்பானிய மக்களிடையே கவலை எழுந்துள்ளது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!