
பெய்ஜிங், ஜூன் 10- பெய்ஜிங்கிலுள்ள, பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் நிறுவப்பட்ட ‘ரோலர் கோஸ்டர்’ பழுதடைந்ததால், அதனுள் அமர்ந்திருந்தவர்கள், தலை கீழாக தொங்கிய நிலையில் இருந்த சம்பவம் அனைவரையும் பீதியடைய செய்துள்ளதென்று உள்ளூர் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
12க்கும் மேற்பட்டவர்கள் பல நிமிடங்களாக தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த நிலையில் அவர்களில் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், ஒரு சிலருக்கு பார்வை மங்கலாக இருந்ததாகவும் மேலும் சிலர் மரண விளிம்பிற்கு தள்ளப்பட்டதாகவும், அந்த இக்கட்டான தருணத்தை விவரித்துள்ளனர்.
பயணிகளின் கால் சட்டை பையிலிருந்து விழுந்த நாணயங்கள், ‘ரோலர் கோஸ்டர்’ எந்திரங்களுக்குள் விழுந்து, அவற்றைப் பழுதடைய செய்துள்ளன என்று பூங்கா நிர்வாகத்தினர் விளக்கமளித்துள்ளனர்.