பொது பல்கலைக்கழகங்களுக்கான UPUOnline விண்ணப்பம் திங்கள் வரை நீட்டிப்பு

கோலாலம்பூர், மே-18- உயர் கல்விக் கூடங்களில் மேற்படிப்பைத் தொடர UPUOnline வழியான இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் நாளை காலை 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
தத்தம் கல்வித் தகுதிக்கு பொருத்தமான படிப்பைத் தேர்ந்தெடுக்க, மாணவர்களுக்கு மேலும் கால அவகாசம் வழங்கும் நோக்கில் அது நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே இவ்வாய்ப்பை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.
அதே சமயம் அவசர கதியிலும் முடிவெடுக்கக் கூடாது; காரணம் இது அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியது என, உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ சம்ரி அப்துல் காடிர் நினைவுறுத்தினார்.
அனைத்து பின்புலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும், உயர் கல்வி வாய்ப்பு சமமாகக் கிடைப்பதை உறுதிச் செய்ய அமைச்சு தன்னால் ஆன அனைத்தையும் செய்யும் என்றார் அவர்.
நிதி சிக்கல் பற்றியெல்லாம் மாணவர்களுக்குக் கவலை வேண்டாம்.
இடம் கிடைத்ததும் முதலில் பதிந்துக் கொள்ளுங்கள்; மற்றவற்றை அரசாங்கம் பார்த்துக் கொள்ளுமென அமைச்சர் உறுதியளித்தார்.
UPUOnline விண்ணப்பம் தொடர்பான மேல் விவரங்களுக்கு https://upu.mohe.gov.my/ இணையத் தளத்தை வலம் வரலாம்.